Country | |
Publisher | |
ISBN | 9789380690506 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 107 p. ; 22 cm. |
Product Weight | 200 gms. |
Shipping Charges(USD) |
எஸ். சண்முகத்தின் இக்கவிதைகளை வாசித்தலில் அகப்படும் இந்த ”அர்த்தங்களின் உபரி” என்பது கவித்துவ மொழிதலின் வழியாக சொற்களை அடர்வு மிக்கதாக மாற்றுகிறது. இக்கவிதைகள் நிலம்-பொழுதில் அல்லது கால-வெளியில் பிரசன்னமாகியிருக்கும்போதே, அதன் அர்த்த அழிவின் சுவடுகளும், அர்த்தங்கள் முழுமையுறா எச்சமும், முழுமையை அடையவியலா மிச்சமும் கவித்துவ பொருள்கொள்தலின் இன்மையாக மறைவியக்கம் கொள்கிறது. தத்துவரீதியாகச் சொன்னால் காதல் என்ற அகச்சொல்லாட்டத்தின் வழியாக இன்மையின் இருப்பை பேசித் தீராக் கவிதைகள் இவை. ”புலப்படலுக்கு எட்டாது வளருவதைத்தான் /உன் சங்கேதமென்று சுட்டிச் சொல்கிறேன்/அலறும் உளத்தின் பேதைமைச் சப்தம்/உன் புறக்கோட்டைத் தீண்டும் முன்பே அற்றுவிடுகிறது”