Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil, English |
Bib. Info | 112p.; ills. 23 cm. |
Product Weight | 290 gms. |
Shipping Charges(USD) |
தமிழகத்தில் பாறை ஓவியங்கள் முதன்முதலாக அடையாளப்படுத்தப்பட்ட பின் நாற்பது ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது இந்நூல். அறிவியல் வளர்ச்சியில் இன்று பாறை ஓவியங்கள் மிக உயர்தர படங்களாக எடுக்கப்பட்டு காணக்கிடைக்கின்றன. எழுபதுகளில் கண்படி என்று கைகிறுக்கல்களாக அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதன்படி வரையப்பட்டவை சிறு சிறு பதிவுகளாக ஆங்காங்கே சிதறிபோயின. கருப்பு வெள்ளை காலம் போல ஜே.சி.பி. போன்ற ஓங்கிகளால் தமிழக மலைகள் காணாமல் போக ஆரம்பித்தன. பாறைகளில் இருந்த ஏராளமான ஓவியங்கள் இந்த உலகத்தினரின் பார்வையில் படாமாலேயே காலத்துள் மீட்கப்படாத வகையில் புதைந்து போயின. இந்த நவீன யுகத்தில் ஆவணபடுத்தும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள மிகக் குறுகிய கால அவகாசம் மட்டும் தான் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இயற்கை அழிய மனிதன் எத்தனை நாள் இருந்துவிடப் போகிறான். தமிழகத்திலுள்ள பாறை ஓவியங்களை ஆவணபடுத்தும் ஒரு சிறு முயற்சியாக இந்நூல் வெளிவருகிறது.