Country | |
Publisher | |
ISBN | 9789387499140 |
Format | HardBound |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 1039p.; ills. 23 cm. |
Product Weight | 1360 gms. |
Shipping Charges(USD) |
பாரதி பிறந்த ஆண்டில் (1882) அவனுடன் சேர்ந்து மலர்ந்த செந்தாமரை சுதேசமித்திரன். அதில் பணிக்கு அமர்ந்த (நவம்பர் 1904) பிறகே அரசியல் எழுச்சி பெறுகிறான் பாரதி. ஆக, பத்திரிகைத் தொழிலே அவனது பிரதான களம். தனிமனித வட்டம் தாண்டிச் சமூக மனிதன் எனும் கூட்டுச் செயல்பாட்டிற்குப் பாரதியை நகர்த்திய பெரும்பேறு சென்னையைச் சாரும். ஆகப் பெரிய காரியங்கள் அவன் புரிந்தது இங்குதான். அவனது 'கனவு', 'சின்னச் சங்கரன் கதை' என இரண்டிலும் சென்னை மற்றும் புதுவை புகலிடம் குறித்த குறிப்புகள் இடம் கொள்ளாத போதும் அவனால் பின்னாளில் எழுதிக் குவிக்கப்பட்ட அரசியல் வியாசங்கள் ஏனைய நட்டத்தை ஈடு செய்வன. ஆயினும் அவை யாவையும் தர்க்கங்கள், நிலைப்பாட்டை விவரிக்கும் எதிர்வினைகள், அறத்தின்பால் பிறந்த கர்ஜனைகள், பதர்களைக் கலைக்கும் பக்கச் சார்புகள், பசப்பலற்ற பச்சை உண்மைகள், நியாயங்கள், நீதிகள், நேர்பட கிழித்த நேர்மைக் கோடுகள், உலகுக்குரைத்த கூக்குரல்கள், பெருஞ்சூறைக்கு அடங்காத சூளுரைகள், அகத்தை அளந்து காட்டும் அசல் வரிகள், வேக்காட்டை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கைகள்.