Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | Part 1 to 13 ; 22 cm. |
Product Weight | 6000 gms. |
Shipping Charges(USD) |
திருக்குறட் குமரேச வெண்பா என்னும் நூல் தூத்துக்குடி கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரால் எழுதப் பட்டுள்ளது. முதலில் பருவ இதழாக வெளிவந்து, பின்னர் 5 தொகுதிகளில் 4602 பக்கங்களில் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு வெண்பா அந்நூலில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் அதனதன் திருக்குறளோடு தொடர்புடைய ஒரு கதை சுட்டப் பட்டுள்ளது. வெண்பாவின் முதலிரண்டு அடிகளில் கதைச் செய்தியின் கருத்து உள்ளது. பின்னிரண்டு அடிகள் திருக்குறள். வெண்பாவுக்கு அடியில் குறள் விளக்கமும், கதை விளக்கமும் மேற்கோள் பாடல்களோடு தரப்பட்டுள்ளன. கதையோடு கூடிய அதன் கருத்துரைப் பாடல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்வதற்காக 2 வெண்பாவை மட்டும் காணலாம்.