Country | |
Publisher | |
Format | HardBound |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 712p. ; 22 cm. |
Product Weight | 930 gms. |
Shipping Charges(USD) |
நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷீயஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரான் எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த பெண்கள் -அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஓரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள். அது துயரமெனும் கீதமே.‘அற்றவைகளால் நிரம்பியவள்’ நம்மை ஏக்கமுறச் செய்கிறது. இத்தனை மனிதர்கள், கலாசாரம், துயரம்.. வாழ்நாளில் ஒருபோதும் காணவியலாத நிலப்பரப்புகள். இந்த வாழ்வை இன்னும் நேர்மையாக, உண்மையாக, ஆத்மார்த்தமாக, அந்தரகமாக வாழ்ந்திருக்க வேண்டும் \ வாழ வேண்டும் என்கிற வேட்கையை உருவாக்குகிறது. நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷீயஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரான் எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த பெண்கள் -அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஓரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள். அது துயரமெனும் கீதமே.‘அற்றவைகளால் நிரம்பியவள்’ நம்மை ஏக்கமுறச் செய்கிறது. இத்தனை மனிதர்கள், கலாசாரம், துயரம்.. வாழ்நாளில் ஒருபோதும் காணவியலாத நிலப்பரப்புகள். இந்த வாழ்வை இன்னும் நேர்மையாக, உண்மையாக, ஆத்மார்த்தமாக, அந்தரகமாக வாழ்ந்திருக்க வேண்டும் \ வாழ வேண்டும் என்கிற வேட்கையை உருவாக்குகிறது. எல்லை கடந்தும் சாவற்றும் வாழ்கிற தமிழ்ச் சாதிய சமூகத்தின் மனோபாவத்தை நாவலின் போக்கில் அரசியலாகப் பதிவாக்கியிருப்பதன் வழி கூடுதல் கவனம்கொள்ள வேண்டிய படைப்பாக உருவாகியிருக்கிறது இந்த நாவல்.