Country | |
Publisher | |
ISBN | 9781642496727 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | ix, 594p. ; 22 cm. |
Product Weight | 830 gms. |
Shipping Charges(USD) |
இந்த நாவல், அன்பு, ஆசை, காதல், நட்பு, உறவுகள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் குடும்பக்கதையின் பின்னணியில் பின்னப்பட்ட ஓர் அழகான காதல் கதையாகும். மூன்று காதல் கதைகள் ஓர் புள்ளியில் இணைகின்றன. சுழற்றி அடிக்கும் பல திருப்பங்கள் நிறைந்த கதை என்பதால், கடைசிப் பக்கத்தைப் படிக்காமல் இந்த புத்தகத்தை கீழே வைக்க முடியாது. இந்த நாவலுக்குள் பல இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு பூ மலர்வது போல அந்த இரகசியங்கள் மொட்டவிழ்ந்து விரிகின்றன...கதைக்குள் கதையாகப் பின்னிப் பிணையப்பட்டுள்ள மூன்று முக்கோணக் காதல் கதைகள். இந்த கதையின் மையப்புள்ளி சிரித்துக் கொண்டே அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுக்கும் ஓர் அழகிய இளம் பெண். அவளைச் சுற்றிதான் கதை மாந்தர்கள் அனைவரும் சுற்றிச் சுழலுகிறார்கள். கதையின் துவக்கத்தில் யாருமற்ற அனாதையாக ஓர் அழகிய, இளகியமனம் படைத்த வாலிபன் கைகளில் விழும் அப்பெண் கதை முடியும் பொழுது தனக்கென அனைத்து உறவுகளையும் பெற்றெடுக்கிறாள். அனைவருக்கும் தனித் தனியாக ஒரு கனவுண்டு, எல்லோருடைய கனவுகளும் முடிவில் அவளால் உயிர் பெற்று உயிர்ப்பிக்கப்படுகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற சித்தாந்தம் மெய்ப்பிக்கப்படுகிறது.