Country | |
Publisher | |
ISBN | 9788193773307 |
Format | HardBound |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | xl, 536 + xxxii p. ; 23 cm. |
Product Weight | 1050 gms. |
Shipping Charges(USD) |
உ.வே.சா., தமிழின் மாண்பை காத்த பெருமகனார். அவர் தமிழன்னைக்கு செய்த தொண்டுகள் ஏராளம். தற்போது அவர் பெருமையை இந்த நுால் வெளிச்சமிட்டு காட்டுகிறது. உ.வே.சா., நுால் நிலைய வெளியீடான இப்புத்தகம், அவரோடு தொடர்பு கொண்ட பலர் எழுதிய கடிதங்களை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது. அவரோடு சம காலத்தில் வாழ்ந்த பல அறிஞர்கள் எழுதிய கடிதங்களின் முதல் தொகுதியாக மலர்ந்த இந்த நுாலில், ஜி.யு.போப் எழுதிய கடிதமும் அடங்கும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முதன் முதலில், 1854ம் ஆண்டில் காகித அஞ்சல் தலைகள் வந்தன. தமக்கு வந்த கடிதங்களை, பெருமகனார் உ.வே.சா., பத்திரப்படுத்தி வைத்ததால், இந்தக் கருவூலம் இன்று தமிழர்களின் கைகளில் நுாலாகத் தவழ்கிறது. இக்கடிதங்கள் பல விஷயங்கள் தொடர்பானது என்றாலும், தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை மையப்படுத்தி இருப்பதைக் காணலாம்.