Country | |
Publisher | |
ISBN | 9788184930863 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2009 |
Bib. Info | 198p.; 22 cm. |
Shipping Charges(USD) |
ஒவ்வொரு நொடியையும், குதிரைப் பாய்ச்சலில் தாவி ஓடிக் கடந்துகொண்டே இருக்கிறது காலம். ஒரு மனிதனின் வாழ்க்கை அதன் ஓட்ட நிழலில் கரைகிறது, அல்லது உயிர்க்கிறது. எல்லா உயிர்களின் ஆதி அந்தமும் தெரிந்த ஒரே சாட்சியமாக காலம் ஒன்றுதான் இருக்கிறது. அது ஒன்றுதான் சாசுவதம். இந்த நாவலில், நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையில், சிறு பகுதியை விஸ்தாரமாக விவரிக்கிறார் வண்ணநிலவன். நெல்லையப்பன், அவன் குடும்பம், நீதிமன்றத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், அவன் வேட்கை, காதல்... எல்லாவற்றையும், அதன் இயல்புத்தன்மை கொஞ்சமும் குறையாமல், அதே சமயம் வெகு அழுத்தமாக, வண்ணநிலவன் தொட்டுக் காட்டுகிறார். எல்லா பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில், ஏற்கெனவே நமக்கு நன்கு அறிமுகமானவர்களைப் போல இருக்கிறார்கள்.