Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 88p.; |
Shipping Charges(USD) |
எந்த நேரத்திலும், கேரள மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்திருப்பதாகக் கேரள அரசு, உள்நோக்கத்துடன், மக்கள் நம்பும் வகையில் கற்பனையாகப் பிரச்சனையை உருவாக்கியதோடு, தனக்குச் சாதகமானதும், தேசிய நலனுக்குப் பாதகமானதுமான ஒரு தவறான இடைக்காலத் தீர்வைப் பெற்றுச் செயலாக்கி வருவதால், நாட்டின் முக்கியமான நீர்வளம், வறட்சியான பகுதிகளுக்குக் கிடைக்காமல் தொடர்ந்து வீணாக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரச்சினையை இழுத்து, ஒப்புக்கொண்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கோ, கேரள அரசு கட்டுப்படாமல் இருந்து வரும் நிலையில், பிரச்சனை மீண்டும் உச்சநீதிமன்றம், உயர்மட்டக்குழு என இழுபட்டுக் கொண்டிருக்கிறது.