Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 209p.; 22 cm. |
Product Weight | 350 gms. |
Shipping Charges(USD) |
இந்நூல் கம்பராமாயணத்தில் உள்ள காலக்குறிப்புகளை ஆராய்ந்து எந்த எந்த நிகழ்ச்சி எந்த எந்தக் காலத்தில் நடந்தது என்பதனை முதன்முதலாகத் தெளிவாக்குகிறது. இதில் வான்மீகத்தின் காலநிரலினும் கம்பநாடரின் காலநிரல் வேறானது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரனோடு இராமலக்குவர் வேள்விகாக்கப் புறப்பட்ட நாள்; திருமணத்தின்போது இராமன், சீதை ஆகியோர் வயது; யோசனை, காதம் என்னும் அளவுகளின் வரையறை; இராமன் வனவாசம் புறப்பட்ட காலம்; தசரதன் மறைந்த நாள்; காட்டில் வெவ்வேறு இடங்களில் மூவரும் தங்கியிருந்த காலம்; சீதை சிறையிருந்த மாதங்கள்; இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற பின் இராமன் முயற்சியின்றிக் கிடந்த நாள்கள்; இராமலக்குவர் கிட்கிந்தையை அடைந்த காலம்; அனுமன் சீதையைச் சந்தித்த நாள்; போர் நடந்த நாள்கள்; சீதை சிறை மீட்கப்பட்ட நாள் அமாவாசையா, பௌர்ணமியா?