Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2023 |
Bib. Info | 158p, |
Categories | Health |
Shipping Charges(USD) |
சித்த மருத்துவரான நூலாசிரியர் மூலிகைகள், கிழங்குகள், வேர்களெல்லாம் எந்தெந்த நோய்களுக்கு மருந்துகளாகப் பயன்படுகின்றன என்பதை விளக்கி "தினமணி'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இதை வைத்துக்கொள்வது எப்படி என்பதை வழிகாட்டுகிறது இந்த நூல். எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருப்பதைப் படிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் வேம்பு, வெந்தயம், துளசி, வில்வம், மஞ்சள் போன்றவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குணமுடையவையாகவும், நிலவேம்பு, ஆடாதொடை, பப்பாளி இலை போன்றவை டெங்கு வராமல் காக்கக்கூடியவையாகவும், கடுக்காய், நெல்லிக்காய், நாயுருவி, கீழாநெல்லி போன்றவை சிறுநீரகத்தைக் காக்கும் மருந்துகளாகவும் இருக்கின்றன என்று கூறுகின்றார் நூலாசிரியர்.